News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஸ்டெர்லைட் ஆலையை மூட பெரும்பான்மையான பொதுமக்கள் மனு – ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வால்

Web Team by Web Team
September 23, 2018
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஸ்டெர்லைட் ஆலையை மூட பெரும்பான்மையான பொதுமக்கள் மனு – ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வால்
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த மே மாதம் பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்தநிலையில், மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மேகாலயா மாநில உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவை பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது. இந்தக் குழுவில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தைச் சேர்ந்த டாக்டர் சதீஸ் மற்றும் வரலட்சுமி ஆகியோர் இடம் பெற்றனர்.

இந்தநிலையில், தூத்துக்குடிக்கு சனிக்கிழமை வந்த குழுவினர், உப்பாற்று ஓடைப் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டுள்ள பகுதியைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். பின்னர், ஞாயிற்றுக்கிழமை காலை தூத்துக்குடி சிப்காட் வளாகப் பகுதியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்குச் சென்றனர். அங்குள்ள, இயந்திரப் பகுதிகள், தாமிரத் தாது மற்றும் பிற ரசாயனப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா மற்றும் மாசுக் கட்டுபாட்டு வாரியம், பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளும் உடன் சென்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையில் மேற்கொண்ட ஆய்விற்குப் பிறகு, குமரெட்டியபுரத்திற்கு சென்ற ஆய்வுக் குழுவினர் அங்குள்ள பொதுமக்களை சந்தித்தனர். இதையடுத்து, தூத்துக்குடியில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பொதுமக்களைச் சந்தித்த ஆய்வு குழுவினர், அவர்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால், பெரும்பான்மையான மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். ஆலை மீண்டும் செயல்படக் கூடாது என்று அதில் குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறினார்.

சென்னையில் திங்கட்கிழமை ஆலோசனை நடத்த உள்ளதாகவும், விரைவில் தங்களது அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தருண் அகர்வால் தெரிவித்தார். தேவை ஏற்பட்டால், ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: SterliteSterlitecloseTharun Agarwal
Previous Post

தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டம் – பிரதமர் தொடங்கி வைத்தார்

Next Post

விஜய்க்கு, விஜயகாந்த் வாழ்த்து…!

Related Posts

ஸ்டெர்லைட் தொழிற்சாலை துவங்குவதற்கு நிலம் கொடுத்தது திமுக அரசு – எதிர்க்கட்சித் தலைவர்!
அரசியல்

ஸ்டெர்லைட் தொழிற்சாலை துவங்குவதற்கு நிலம் கொடுத்தது திமுக அரசு – எதிர்க்கட்சித் தலைவர்!

April 20, 2023
இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது… ஏன்?
TopNews

இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது… ஏன்?

August 1, 2021
ஸ்டெர்லைட்டில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி பாதிப்பு
TopNews

ஸ்டெர்லைட்டில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி பாதிப்பு

May 14, 2021
தூத்துக்குடி ஸ்டெர்லைட ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
TopNews

தூத்துக்குடி ஸ்டெர்லைட ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

May 13, 2021
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் தயாரிக்கும் பணி விரைவில் தொடக்கம்
TopNews

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் தயாரிக்கும் பணி விரைவில் தொடக்கம்

May 6, 2021
ஆக்ஸிஜன் மட்டும்தான் தயாரிக்கிறார்களா? ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க குழு அமைப்பு
TopNews

ஆக்ஸிஜன் மட்டும்தான் தயாரிக்கிறார்களா? ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க குழு அமைப்பு

April 30, 2021
Next Post
விஜய்க்கு, விஜயகாந்த் வாழ்த்து…!

விஜய்க்கு, விஜயகாந்த் வாழ்த்து...!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version