News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

நீட் பிரச்சனை – உச்ச நீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ மேல்முறையீடு செய்ய முடிவு

Web Team by Web Team
July 13, 2018
in இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
நீட் பிரச்சனை – உச்ச நீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ மேல்முறையீடு செய்ய முடிவு
Share on FacebookShare on Twitter

நீட் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளநிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சி.பி.எஸ்.இ முடிவு செய்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டு, தமிழகத்தில் முதல்கட்ட கலந்தாய்வு கடந்த 7ஆம் தேதி நிறைவடைந்தது.

RelatedPosts

மாநிலங்களவையில் இருந்து தமிழ்நாடு எம்.பி.க்கள் வெளிநடப்பு

மாநிலங்களவையில் இருந்து தமிழ்நாடு எம்.பி.க்கள் வெளிநடப்பு

February 4, 2022
முதல் முறையாக இந்தாண்டு ஆன்லைன் வழியாக மருத்துவ கலந்தாய்வு

முதல் முறையாக இந்தாண்டு ஆன்லைன் வழியாக மருத்துவ கலந்தாய்வு

February 2, 2022

இதனிடையே, தமிழ் வழியில் நீட் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு 49 வினா குறிப்புகள் தவறாக இருந்ததால், அதற்குரிய 196 மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி.  டி.கே. ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழில் தேர்வெழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்களை வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 2 வாரங்களுக்குள் நீட் தரவரிசைப் பட்டியலை திருத்தி வெளியிட வேண்டுமென சி.பி.எஸ்.இ.நிர்வாகத்துக்கு நீதிமன்றம் ஆணையிட்டது.

இந்நிலையில், வியாழனன்று இணையத்தளத்தில் வெளியாக இருந்த அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வுக்கான முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தேசிய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. இதையடுத்து, வரும் 16ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெற இருந்த, 2-ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வும் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

2-ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழில் நீட் தேர்வெழுதிய அனைவருக்கும் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டுமென்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: cbscneetசிபிஎஸ்நீட்
Previous Post

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 16-ஆம் தேதி கூடுகிறது

Next Post

கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் பயிற்சியாளர் கைது

Next Post
கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் பயிற்சியாளர் கைது

கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் பயிற்சியாளர் கைது

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist