தூத்துக்குடியில் 5-ம் தேதி அம்மா திட்ட முகாம்

 

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 5 ம்தேதி அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்

அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கும் பொருட்டு தமிழக அரசால் அம்மா திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் குமாரகிரி, வல்லநாடு கஸ்பா, அம்மன்புரம், பிடானேரி, எழுவரைமுக்கி, கொடுக்காம்பாறை, நாகலாபுரம், எட்டயபுரம், உள்ளிட்ட கிராமங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. 5 ம்தேதி நடக்க உள்ள இந்த முகாமில் முதியோர் ஓய்வூதியம், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை, உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு – இறப்பு சான்றுகள், சாதிச்சான்று போன்ற கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும். எனவே சம்பந்தப்பட்ட கிராம மக்கள் முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version