தமிழகத்தில் 4 நாட்களுக்கு கன மழை பெய்யும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை முதல் கர்நாடகா வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் சில இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. கடலோர மாவட்டங்களின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கோட்டை, வால்பாறையில் தலா 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இதேபோன்று, திருச்சி, திண்டிவனம், செங்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னை நகரின் பல பகுதிகளிலும் இன்று காலை லேசான மழை பெய்தது.

Exit mobile version