தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது – வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் !

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் 20-வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர்,அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாக பராமரிப்பு பணிகளுக்கான 2 சதவிகித தொகையை மானியத்துடன் வழங்கவுள்ளதாக கூறினார்.மேலும் மாநிலத்தில் கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும்,தமிழகத்தில் மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றும் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version