குறைசொல்வதே திமுகவின் வாடிக்கை – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கோவை பெரிய கடை வீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழகத்தில் ஜனநாயக உரிமையும், கருத்துரிமையும் இருப்பதால்தான் எச்.ராஜாவால் பேசமுடிகிறது என கூறினார்.

தமிழிசைக்கு ஏற்பட்டது போல, அரசியல் கட்சியினர் யாருக்கும் ஏற்படலாம் என்பதால் தான் சோபியா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் ஒரு குற்றச்சாட்டை கூறி வருவதை பற்றி குறிப்பிட்ட அவர், குற்றம் சொல்வதுதான் திமுகவின்  வாடிக்கை என்றார்.

Exit mobile version