கர்நாடகாவின் தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

கர்நாடகாவின் தென் மாவட்டங்களில் 48 மணி நேரத்துக்குக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகாவில் பெங்களூரு, மாண்டியா, மைசூரு ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்குக் கனமழை நீடிக்கும் என கர்நாடக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், அங்கு மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக லட்சத்தீவு, கேரளா மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 35 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கர்நாடகா மீனவர்கள் அரபிக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version