News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

எச்.ராஜா 4 வாரத்தில் ஆஜராக வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு

Web Team by Web Team
September 17, 2018
in TopNews, அரசியல், செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
எச்.ராஜா 4 வாரத்தில் ஆஜராக வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு
Share on FacebookShare on Twitter

விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது நீதிமன்றத்தை தகாத வார்த்தைகளால் பேசியது தொடர்பாக, எச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில், நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின்போது, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, தடையை மீறி ஊர்வலம் சென்றார். அப்போது போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நீதிமன்றத்தையும், போலீசாரையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இதனால், அதிர்ச்சியடைந்த பல்வேறு தரப்பினரும், எச்.ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், நீதிமன்றத்தைத் தவறாக சித்தரித்துப் பேசியதால் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர்.

imageஇந்நிலையில், எச்.ராஜாவிற்கு எதிராக வழக்கு, தானாக முன்வந்து விசாரிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு, எச்.ராஜா மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர்.

இதனிடையே, எச்.ராஜா நீதிமன்றம் பற்றி தவறாகப் பேசியது தொடர்பாக, சிடி செல்வம், நிர்மல் குமார் அமர்வு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. மேலும், எச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏற்கனவே எச்.ராஜா மீது, தடையை மீறி ஊர்வலம் சென்றது, நீதிமன்றத்தை அவதூறாகப் பேசியது, பொது இடத்தில் தகாத வார்த்தையால் திட்டியது, அரசு ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டுவது, பிற மதத்தினரைப் புண்படுத்தும் வகையில் பேசியது உட்பட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், எச்.ராஜாவைக் கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, 4 வாரத்திற்குள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Tags: HighCourtHRajaஉயர்நீதிமன்றம்எச்.ராஜாசென்னை உயர்நீதிமன்றம்
Previous Post

பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து

Next Post

பெரியார் திருவுருவப்படத்திற்கு துணை முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

Related Posts

அதிமுக வழக்கு – திங்கட்கிழமை ஒத்திவைப்பு!
அரசியல்

தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! என்ன திடீர்னு?

July 10, 2023
கடலில் பேனா சிலைவைப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மூவர் வழக்கு!
இந்தியா

’7’ புதிய தலைமை நீதிபதிகள்! மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை!

July 7, 2023
அதிமுக வழக்கு – திங்கட்கிழமை ஒத்திவைப்பு!
அஇஅதிமுக

அதிமுக வழக்கு – திங்கட்கிழமை ஒத்திவைப்பு!

February 16, 2023
eps report about verdict
தமிழ்நாடு

’இன்றைய தினம் நீதி, நேர்மை வென்றுள்ளது’ – நீதிமன்ற தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை!

September 2, 2022
admk verdict jayakumar
அரசியல்

’எடப்பாடி ஹீரோ, ஓபிஎஸ் ஜீரோ!’ – தீர்ப்பு குறித்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலகல பேச்சு!

September 2, 2022
eps highcourt
அரசியல்

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! கொண்டாட்டத்தில் அதிமுகவினர்!

September 2, 2022
Next Post
பெரியார் திருவுருவப்படத்திற்கு துணை முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

பெரியார் திருவுருவப்படத்திற்கு துணை முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version