உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

ஏழு பேர் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உத்தரவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முக நூலில் பதிவிட்டுள்ள அவர், திமுகவின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி இருப்பதாக கூறியுள்ளார். முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக அமைச்சரவையை கூட்டி, ஏழு பேர் விடுதலை குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

Exit mobile version