மேகேதாட்டு அணை குறித்து அறிக்கை தயாரிக்க தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

மேகேதாட்டு அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடைவிதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த தமிழக அரசு, திட்ட அறிக்கை தயாரிக்க தடைவிதிக்கவும் வலியுறுத்தியிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், அணை தொடர்பான பணிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடைவிதிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் தமிழக அரசின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு 4 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Exit mobile version