தீர்ப்பை மறு ஆய்வு செய்யுங்கள் – உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன் மேல்முறையீடு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தனக்கு வழங்கப்பட்டத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்க்கு விதிக்கப்பட்ட, ஒரு ரூபாய் அபராதத்தை, கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி, அவர் நீதிமன்றத்தில் செலுத்தியிருந்தார். இந்நிலையில், குற்றவாளி என தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு, பிரசாந்த் பூஷன் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவையும், நீதித்துறையையும் விமர்சித்ததை அடுத்து, பிரசாந்த் பூஷன் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷனை குற்றவாளி என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version