இந்தியாவுடன் போர் ஏற்படுமா? இம்ரான்கான் அளித்த பதிலை படியுங்கள்!

 

பாகிஸ்தான் பிரதமராக அண்மையில் பதவி ஏற்றார் இம்ரான்கான். பாகிஸ்தான் அரசியலை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கும் ராணுவம் இம்ரான்கானுக்கு ஆதரவாக இருந்தது. இதனால் இம்ரான்கான் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இம்ரான்கான், ஒருபோதும் எந்த நாட்டுடனும் போர் செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளார். பாகிஸ்தான் ஒரு போதும் போரை விரும்பியதில்லை என்றும் அவர் தெரிவித்தார். மக்களுக்காக பணியாற்றுவதே தமது அரசின் நோக்கம் என்றும் இம்ரான்கான் குறிப்பிட்டார்.

Exit mobile version