ஆந்திராவில் வெளுத்து வாங்கும் கனமழை!

கேரளாவில் மழையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருவதால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் சில நாட்களாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. மழையின் தீவிரம் குறைந்துள்ளநிலையில், ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. 4வது நாளாக மழை வெளுத்து வாங்குவதால், பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன.

கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வெள்ள நீர் அபாய கட்டத்தை தாண்டி பாய்வதால், தாழ்வான பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளன.

தரைப் பாலங்கள் நீரில் மூழ்கி இருப்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்கள் தீவுகளாக காட்சி அளிப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

  

Exit mobile version