உடுமலை, திருப்பூர் மண்டல அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் – 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற மண்டல அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் உடுமலை ஜீவா சிலம்பம் அசோசியேஷன் இணைந்து மண்டல அளவிலான சிலம்பாட்ட போட்டிகளை நடத்தின.

ஒருநபர், இருநபர் மற்றும் குழுக்கள் என பல பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று சிலம்பம் ஆடினர்.

ஒரு பிரிவு மாணவர்கள் ஸ்கேட்டிங் ஆடிக்கொண்டே சிலம்பம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Exit mobile version