தீவிரவாதிகள் ஊடுருவல்: திருப்பூரில் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு

திருப்பூரில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

திருப்பூரில் தீவிரவாதிகள் ஊடுருவல் என கியூ பிராஞ்ச் மற்றும் எஸ்ஐயூ காவல்துறை தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து திருப்பூரில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் தீவிரப் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் என்ற தகவலின் படி, 4 பேரின் புகைப்படங்களைக் கொண்டு காவல்துறையினர் அவர்களைத் தேடி வருகின்றனர்.

Exit mobile version