மீனவர் குடும்பத்தில் பிறந்து கடலோர காவல்படையில் சேர்ந்த இளைஞர்

ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடம் பகுதியில் வசிக்கும் மீனவர் டியோடாஸ் என்பவர் இந்திய கடலோர காவல்படையில் சேர்ந்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராமேஸ்வரம் அருகிலுள்ள தங்கச்சிமடம் பகுதியில் வசித்து வரும் டியோடாஸ் என்பவர் சாதாரண மீனவக் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் 12-ம் வகுப்பு முடித்து விட்டு வறுமையின் காரணமாக தன் தந்தையுடன் மீன்பிடித் தொழிலுக்கு சென்றார். இந்தநிலையில், கடலோர காவல் படையில் ஆள் சேர்ப்பு நடைபெறுவதை அறிந்த அவர், மீன்வளத்துறையின் அறிவுறுத்தலின்படி பயிற்சி வகுப்புக்கு சென்றார். சிறப்பாக படித்த டியோடாஸ், தேர்வில் வெற்றி பெற்று இந்திய கடலோர காவல்படையில் சேர்ந்துள்ளார்.

Exit mobile version