உலக மல்யுத்த போட்டி: வெண்கலம் வென்று சாதனை படைத்தார் பஜ்ரங் புனியா

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் பஜ்ரங் புனியா மற்றும் ரவிக்குமார் தாஹியா ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

கஜகஸ்தானில் நடைபெற்று வரும் போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் மங்கோலிய வீரர் துல்கா துமர் ஒச்சிரை எதிர்கொண்ட பஜ்ரங் புனியா 8-7 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்று பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் பஜ்ரங் புனியா படைத்துள்ளார். இதற்கு முன்பு உலகச் சாம்பியன்சிப் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இதேபோல் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா, ஈரான் வீரர் ரெஸா அட்ரி நகர்ச்சியை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். தான் பங்கேற்ற முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலேயே ரவிக்குமார் தாஹியா பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version