குப்பைகளை கைகளால் அள்ளிய ஊழியர்கள் !

சென்னை மாநகராட்சி 12 வது மண்டலம் 161 வார்டுக்கு உட்பட்ட ஜீவன் நகர் அருகில்
உள்ள கால்வாயில் கடந்த சில நாட்களாக குப்பைகள் தேங்கி கழிவு நீர் வெளியே
செல்லாமல் அங்கையே தேங்கி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து அப்பாகுதிவாசிகள் தொடர்ந்து புகார் கொடுத்து வந்தனர். இதனையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மாநகராட்சி ஊழியர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் பயன்படுத்தாமல் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து மாநகராட்சி ஊழியர்களிடம் விசாரித்த போது, அதிகாரிகள் உரிய உபகரணங்களை வழங்குவதில்லை எனவும், மீறி கேட்டால் வேலையைவிட்டு தூக்கிவிடுவதாகவும் மிரட்டுகின்றனர் என மாநகராட்சி ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர்.

Exit mobile version