சுகாராதரமற்ற நிலையில் காணப்படும் தூய்மை பணியாளர்களின் குடியிருப்பு பகுதி !

திருநெல்வேலி தெற்கு மவுண்ட் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு தூய்மை பணியாளர்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும், ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதாலும், இங்கு வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் தங்களது உயிரை துச்சமென மதித்து வேலை பார்த்த தூய்மை பணியாளர்கள் தற்போது டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விடியா அரசு தூய்மை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version