News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடும் பெண்கள்

Web Team by Web Team
June 22, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடும் பெண்கள்
Share on FacebookShare on Twitter

தமிழக அரசின் உதவிகள் மூலம், மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் சாதனைப் பெண்கள் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்…

விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கத்தில், இந்த கைவினைக் கலைஞர்களின் கலைக்கூடம் இயங்கி வருகிறது. இங்கு 120 பெண்கள் உள்பட 150 பேர் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர். இங்கு, களிமண்னை உருண்டை பிடிப்பது முதல், அதை பல்வேறு வடிவங்களாக ஆக்குவது, வண்ணம் தீட்டுவது என, பல கட்ட வேலைபாடுகள் நடைபெறுகிறது. குறிப்பாக, வீடுகளில் உபயோகப்படுத்தும் தண்ணீர் குடுவை, காபி குடுவை, பல வகையான பொம்மைகள், வீட்டு அலங்கார பொருட்கள், பூஜை பொருட்கள், மேசை அலங்கார பொருட்கள், அலுவலகத்திற்கு தேவையாக பொருட்கள் என எண்ணற்ற பொருட்களின் உற்பத்தியில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

1994 ஆம் ஆண்டிலிருந்து, பெரும்பான்மையான பெண்களை கொண்டு, இந்த நிறுவனத்தை நடத்தி வருபவர் சகிலா ஃபாரூக். பல்வேறு இன்னல்களை கடந்து, இந்த நிறுவனத்தின் மூலம், மண்பாண்டக் கலை தற்போது வளர்க்கப்பட்டு வருவதாகவும், இங்கு 120 க்கும் மேற்ப்பட்ட ஏழைப் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களை கொண்டே கைவினைப் பொருட்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் இவர் கூறுகிறார்.

தங்களால் உற்பத்தி செய்யப்பட்டு வர்ணங்கள் தீட்டப்படும் பல பொருட்கள், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதும், பல வீடுகள், அலுவலகங்களை அலங்கரிப்பதும், தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக, இங்கு வேலை செய்யும் பெண்கள் கூறுகின்றனர்.

இங்கு தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள், மலேசியா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், நமது கலாச்சாரம் மற்றும் சுகாதாரம் ஆகியவை காக்கப்பட, இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என இவர்கள் வலியுறுத்துகின்றனர்.

பல்வேறு நாடுகளில், குயவர் தொழில் மற்றும் மண்பாண்டம் குறித்து கற்பிக்கப்படுவது போல், தமிழக அரசும் குயவர் தொழில் குறித்தும், மண்பாண்டத்தின் அவசியம் பற்றியும், மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், பாட புத்தகங்கள் மூலம் கற்பிக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இத்தொழிலுக்கு பல்வேறு உதவிகள் செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துகொண்ட நிறுவனத்தின் உரிமையாளர் சகிலா ஃபாரூக், அரசு கூடுதல் உதவியளித்தால் இத்தொழில் குறித்து, மேலும் பலருக்கு பயிற்சி கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

குயவர் தொழிலும், மண்பாண்டமும் மீண்டும் புத்துயிர் பெற்று வரும் நிலையில், மண்பாண்டத்தின் அவசியத்தினை உணர்ந்து, அதை உபயோகிக்க முன்வருவதே, அத்தொழிலில் ஈடுபட்டுவரும் பெண்களுக்கு பெரும் ஊக்குவிப்பாக அமையும்.

Tags: handicraftwomen
Previous Post

H1B விசா என்றால் என்ன? -சிறப்பு தொகுப்பு

Next Post

உலகக்கோப்பையில் இன்று இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்

Related Posts

உலக பெண்களின் ஒற்றைக் குரல்! அவர்தான் மலாலா..!!
இந்தியா

உலக பெண்களின் ஒற்றைக் குரல்! அவர்தான் மலாலா..!!

July 12, 2023
தடை அதை உடை ஒரு சரித்திரம் படை! கால் விரல்களால் இசையமைத்து சாதனை படைத்த சப்திகா!
உலகம்

தடை அதை உடை ஒரு சரித்திரம் படை! கால் விரல்களால் இசையமைத்து சாதனை படைத்த சப்திகா!

July 10, 2023
கர்ப்பப்பை எடுத்தா தான் உயிர் பிழைக்க முடியும்னு சொல்லிட்டாங்க!
தமிழ்நாடு

கர்ப்பப்பை எடுத்தா தான் உயிர் பிழைக்க முடியும்னு சொல்லிட்டாங்க!

February 9, 2023
ஊராட்சி செயலாளர் லஞ்சம் பெற்று மோசடி செய்ததாக பெண் குற்றச்சாட்டு!
தமிழ்நாடு

ஊராட்சி செயலாளர் லஞ்சம் பெற்று மோசடி செய்ததாக பெண் குற்றச்சாட்டு!

February 1, 2023
இளம் பெண்ணிடம் காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி நகை பறிப்பு!
தமிழ்நாடு

இளம் பெண்ணிடம் காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி நகை பறிப்பு!

January 23, 2023
6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர்
TopNews

6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர்

December 1, 2021
Next Post
உலகக்கோப்பையில் இன்று இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்

உலகக்கோப்பையில் இன்று இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version