8 மாத குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்

8 மாத குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரம் அடுத்த பணமலைப் பகுதியைச் சேர்ந்த ஜெயமுருகன் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் திவ்யா என்பவருக்கும் திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகிய நிலையில் தனது எட்டு மாத குழந்தையை திவ்யா கடலில் வீசி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் தற்கொலைக்கு முயன்ற திவ்யாவை காப்பாற்றிய பொதுமக்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், திவ்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version