நகையை எடுத்துக் கொண்டு டிக் டாக் தோழியுடன் ஓடியதாக புகார்: பெண் மறுப்பு

டிக் டாக் வீடியோ மூலம் அறிமுகமான பெண்ணுடன் வீட்டில் இருந்த நகையை எடுத்து கொண்டு ஓடிச் சென்றதாக கூறப்பட்ட வினிதா என்பவர், தான் நகை எதுவும் எடுத்துச் செல்லவில்லை என்றும், கணவன் தன்னை அடித்ததாலேயே வீட்டை விட்டு சென்றதாக கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த கடம்பகுடியை சேர்ந்தவர் வினிதா. இவருடைய கணவர் ஆரோக்கிய லியோ, சிங்கம்பூரில் வேலை செய்துவருகிறார். இந்நிலையில் வினிதா கடந்த சில நாட்களுக்கு முன்பு, Tik Tok செயலி மூலம் அபி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு வீட்டிலிருந்த 50 சவரன் நகையை எடுத்துக் கொண்டு அபியுடன் ஓடி விட்டதாக கணவர், ஆரோக்கிய லியோ காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்நிலையில் சிவகங்கை காவல்நிலையத்தில் வினிதா ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வினிதா, தான் நகையை எடுத்துக் கொண்டு ஓடவில்லை என்றும் கணவர் அடித்து துன்புறுத்தியதாலேயே சரண்யா என்ற தோழியின் வீட்டில் தங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

Exit mobile version