மதபோதகரை,பெண் ஒருவர் மேடையில் இருந்து கீழே தள்ளி விட்ட சம்பவம்

பிரேசில் நாட்டில் பிரசாரம் செய்து கொண்டிருந்த மதபோதகரை, பெண் ஒருவர் மேடையில் இருந்து கீழே தள்ளி விட்ட சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சாவோ பாலோவின் பகுதியில் பாதிரியார் ஒருவர் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, குண்டான பெண்கள் யாரும் சொர்க்கத்திற்கு செல்ல மாட்டார்கள் என அவர் கூறினார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த குண்டான பெண் ஒருவர், மேடை ஏறி பாதிரியாரைக் கீழே தள்ளிவிட்டார். இதில் நிலைகுலைந்த பாதிரியார் கீழே விழுந்து காயமடைந்தார். இந்த சம்பவத்தால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version