பெற்றோரிடம் கர்ப்பத்தை மறைத்த மாணவி பரிதாப பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி கர்ப்பமான மாணவி, பிரசவத்தின் போது, பரிதாபமாக உயிரிழந்தார்.

ஊத்தங்கரை அடுத்த புதூர் புங்கனை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், தனது பெற்றோருடன் பேருந்தில் சென்றபோது, திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த மாணவி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இதுகுறித்து விசாரித்தபோது, ஓட்டுநர் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்துள்ளதாக அந்த மாணவி கூறியதாக தெரிகிறது.

இதனிடையே மருத்துவனையில் அந்த மாணவி அனுமதிக்கப்பட்ட நிலையில், இறந்த குழந்தையை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இதில் உடல் பலவீனமாகி அந்த பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஓட்டுநரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Exit mobile version