மகளுக்கு பாலியல் தொல்லை: இரண்டாவது கணவர் மீது பெண் புகார்

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரண்டாவது கணவர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் மகளிர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியில் வசித்து வருபவர் ராதிகா. கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்த நிலையில், இரண்டாவது கணவர் ஜெய்கரனுடன் தனது 2 மகள்கள் மற்றும் மகனுடன் ராதிகா வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், முதல் கணவர் மூலம் பிறந்த 17 வயது பெண்ணுக்கு ஜெய்கரன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் ராதிகா புகார் அளித்துள்ளார். விசாரணை செய்வது போல் அச்சிறுமிக்கு காவல் ஆய்வாளர் நடராஜன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ள ராதிகா, ஜெய்கரன், காவல் ஆய்வாளர் நடராஜன் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Exit mobile version