கணவன் செல்போனை பிடுங்கி வைத்ததால், பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்செங்கோடு அருகே, செல்போனை கணவன் பிடுங்கி வைத்ததால், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சானார்பாளையம் குடித்தெருவைச் சேர்ந்த கட்டட தொழிலாளியான வடிவேலுவிற்கும் பொற்செல்வி என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், மனைவி பொற்செல்வியிடம் சமைத்து தருமாறு வடிவேலு கேட்டுள்ளார். அதற்கு பொற்ச்செல்வி எதுவும் செய்யாமல், செல்போன் பார்த்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வடிவேலு, பொற்ச்செல்வியின் செல்போனை பிடிங்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வடிவேலு வெளியே சென்றவுடன், பொற்ச்செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்நிலையில், பொற்ச்செல்வியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது அண்ணன் வெள்ளியங்கிரி, திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version