காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற நிலையில், பெண் உயிரிழப்பு

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற நிலையில், பெண் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுகார்ப்பேட்டையை சேர்ந்த சுமர் சிங், காஜல் இருவரும் திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற போலீசார் அறையை திறந்து பார்த்தபோது, விஷம் அருந்திய இருவரில் காஜல் உயிரிழந்தது தெரிய வந்தது. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சுமர் சிங்குக்கு தீவிர சிகிச்சை அளிப்பட்டு வருகிறது.

Exit mobile version