எஸ்.பி.பி.-க்கு பாரத ரத்னா வழங்க பரிந்துரை செய்வேன் : கங்கை அமரன்

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழக்குவதற்கான முயற்சிகளை எடுப்பேன் என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில், ’தமிழ் மொழியில் ஹரிவராசனம்’ இசை வெளியீட்டுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கங்கை அமரன் கலந்து கொண்டு குறுந்தகட்டை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாடகர் எஸ்பிபி மறைவு இசைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என்றார்.

மேலும், பாரத ரத்னா விருதுவழங்கும் குழுவில் தான் இடம்பெற்றிருப்பதால், எஸ்.பி.பி-க்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று உறுதிபட கூறினார்.

Exit mobile version