தனது இறப்பு குறித்து முன்பே அறிந்திருந்தாரா எஸ்.பி.பி.?

தனக்கு சிலை செய்ய ஆர்டர் கொடுத்ததன் மூலம், தனது இறப்பை பாடகர் எஸ்.பி.பி. முன்பே அறிந்திருந்தாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

தனது குரலால் அரை நூற்றாண்டு காலம் இசை ரசிகர்களை கட்டிப் போட்டிருந்த, பிரபல பாடகர் எஸ்.பி.பி. கடந்த 25ஆம் தேதி காலமானார். இதையடுத்து, எஸ்.பி.பி. உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே, தனது பெற்றோருக்கு சிலை செய்து கொடுத்த ஆந்திர சிற்பி ராஜ்குமாரை, கடந்த ஜூன் மாதம் தொடர்பு கொண்ட எஸ்.பி.பி. தனக்கும் சிலை செய்ய ஆர்டர் கொடுத்துள்ளார்.

தனது வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை அறியும் திறன் எஸ்.பி.பி-க்கு உண்டு என, அவருடன் நெருங்கி பழகியவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், தனக்குத்தானே சிலை செய்ய எஸ்.பி.பி ஆர்டர் கொடுத்துள்ள சம்பவத்தின் மூலம் தனது இறப்பை அவர் முன்னமே அறிந்திருந்தாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version