ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அதிகாலை திறக்கப்படும்- தேவஸ்தானம்

ஆங்கிலப் புத்தாண்டு தரிசனத்திற்காக அதிகாலை முதல் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை திறக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

2019 ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதி அதிகாலை 4.30 மணி முதல் சர்வ தரிசனம் தொடங்கும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று ஏழுமலையானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் திருமலை தேவஸ்தானம் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

இன்று மற்றும் நாளை சர்வ தரிசனம், விரைவு தரிசனம் ஆகியவற்றைத் தவிர, மற்ற அனைத்து தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

Exit mobile version