தமிழகத்தில் இன்று முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

தமிழகத்தில் இன்று முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இரவு நேரங்களிலும் வெப்பம் உணரப்பட்டு வருகிறது. இந்தநிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இன்று முதல் அடுத்த 4 தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பநிலை அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் முதல், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version