தாளவாடி அருகே தோட்டத்திற்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தோட்டத்திற்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் பல மணி நேரம் போராடி காட்டிற்குள் விரட்டினர்.

தாளவாடி அடுத்த எரகனள்ளி கிராமத்தில் வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இக்கிராமம் ஜோராஒசூர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகள் விவசாய நிலத்திற்குள் அடிக்கடி வருவதாக தெரியவருகிறது.

இந்நிலையில் ஜீவானந்தம் என்பவரின் வயலுக்குள் நுழைந்த ஒற்றை யானை, வாழைப் பயிர்களை பிடுங்கி எறிந்து சேதப்படுத்தியது. தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் பல மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். ஒற்றை யானை நுழைந்து பயிரை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Exit mobile version