குடியிருப்பு பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானையை, வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சேத்துமடை பகுதியில், கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியது. அவ்வப்போது குடியிருப்புப் பகுதியிலும் காட்டுயானை புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

காட்டு யானை அட்டகாசம் குறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர், குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு யானை தாக்கியதில் சிறுமி உட்பட ஒரு முதியவரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version