News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஏன்?

Web Team by Web Team
May 27, 2021
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஏன்?
Share on FacebookShare on Twitter

தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களாக முழு ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் கொரோனா தொற்று பரவல் சற்றும் குறையவில்லை.

ஊரடங்கை அமல்படுத்துவதில் காட்டப்படும் மெத்தனப்போக்கே இதற்கு காரணம்.

தமிழ்நாட்டில் பாதிப்பு குறையாத நிலையில் சென்னையில் மட்டும் பாதிப்பு குறைந்து வருவதாக தமிழக அரசு கூறுகிறது.

ஆனால் உண்மை நிலை என்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்…

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றில் இரண்டாம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வந்தது.

கடந்த 16ம் தேதி, தினசரி பாதிப்பு 6 ஆயிரத்து 247 ஆக இருந்த நிலையில், தமிழகத்தின் ஒட்டு மொத்த பாதிப்பு 33 ஆயிரத்து181 ஆக இருந்தது.

ஆனால் நேற்று சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 561 ஆக குறைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 33 ஆயிரத்து 764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சென்னையில் பாதிப்பை குறைத்து சாதனை செய்து விட்டதாக தமிழக அரசு கூறி வருகிறது.

ஆனால் உண்மை நிலை என்ன என்று பார்த்தோமானால், சென்னையில் தங்கி இருந்த வெளி மாவட்ட மக்கள் வெளியேறியதே தொற்று பாதிப்பு குறைய காரணம் என்பது தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த பத்தாம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதும்,

22ம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதும் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தங்கிப் பணியாற்றி வந்தவர்களில், சுமார் 20 லட்சம் பேர் சொந்த ஊர் திரும்பியதாக அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதனால் தமிழ்நாடு அரசு எதிர்பார்த்தது போல் சென்னையில் பாதிப்பு குறைந்தது. அதேவேளையில் உள்மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை மறுக்க முடியாது.

கோவையில் 16ம் தேதி 3 ஆயிரத்து 166 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, தற்போது 4 ஆயிரத்து 268 ஆக அதிகரித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 16ம் தேதி ஆயிரத்து 569 ஆக இருந்த பாதிப்பு, தற்போது ஆயிரத்து 775 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் ஆயிரத்து 95 ஆக இருந்த பாதிப்பு, 10 நாட்களில் படிப்படியாக அதிகரித்து 1538 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில், கடந்த 16ம் தேதி 439 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, தற்போது ஆயிரத்து198 ஆக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்து 232 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, ஆயிரத்து 642 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் திருப்பூரில் 919 ஆக இருந்த தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை, ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 16ம் தேதி 311பேர் தொற்று பாதிப்புக்கு பலியான நிலையில், அது தற்போது 475 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 11 நாட்களில், ஒட்டுமொத்தமாக 4 ஆயிரத்து 456 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களில், சென்னையைப் போன்று, போதுமான மருத்துவ உள்கட்டமைப்புகள் இல்லாத நிலையில், வரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

வேலை இழப்பு, பொருளாதார பாதிப்பு என பல இடையூறுகளை சந்தித்தாலும், உயிர்கொல்லி நோயான கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு ஒன்றே தீர்வு என்பதால் கசப்பு மருந்தாக பொதுமக்கள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஆனால் 3 வாரங்களாக அமலில் உள்ள ஊரடங்கின் பலனை, தமிழ்நாடு அரசு அறுவடை செய்ததா என்றால், இல்லை என்பதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்துவதில், ஆரம்பம் முதலே தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டி வருகிறது.

இதனால் ஊரடங்கு அமல்படுத்தி 20 நாட்கள் நிறைவடைந்த போதும், தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து, இந்தியாவிலே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags: #COVID19chennai reportCorona InfectionsnewsjTNGovernmentTNLockDown
Previous Post

முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மலைவாழ் மக்கள் வேதனை

Next Post

ஈரோட்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
ஈரோட்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்

ஈரோட்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version