திருத்தணியில் வீட்டில் வைத்து வளர்க்கப்பட்ட கஞ்சா செடி!

weed plant in tirutani

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த அகூர் காலனி பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி பயிரிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரகசிய தகவலின் பேரில் சக்திவேல் என்பவரது வீட்டில் சோதனை செய்த தனிப்படை போலீசார், 10 கிலோ எடையுள்ள கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவில் இருந்து திருத்தணி வழியாக கஞ்சா கடத்தப்படுவது அதிகரித்துள்ள நிலையில், வீட்டிலேயே கஞ்சா செடி வளர்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version