ஹோட்டல் முன் சட்டையின்றி அரைநிர்வாணமாக ’சேட்டையில்’ ஈடுபட்ட ஆசாமி! பொதுமக்களை அச்சுறுத்தியதால் பரபரப்பு!

rain man atrocities

திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் சட்டையை கழற்றிவிட்டு கொட்டும் மழையில் அலப்பறை செய்த நபர் ஒருவரின் வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.

நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் எதிரில் மேல் சட்டையை கழற்றி விட்டு மழையில் நனைந்தபடியே அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்த ஆசாமி, திடீரென ஹோட்டல் வாசலில் அமர்ந்தும், படுத்துக்கொண்டும் அலப்பறையில் ஈடுபட்டார்.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர் மது போதையால் இப்படி செய்கிறாரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

 

Exit mobile version