குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காலை முதலே அங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

நெல்லை மாவட்டம் குற்றாலத்திற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் இங்கு நீர்வரத்து குறைந்து இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.

கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் கோடை மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். அருவிகளில் குளிக்க வருபவர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Exit mobile version