திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரின் காலணிகளை கையில் கொண்டு வந்த தொண்டன்

திண்டுக்கல்லில் திமுகவின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமியின் காலணிகளைத் தொண்டர் ஒருவர் கையில் எடுத்து வந்து தரும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

கடவுள் மறுப்பாளராக அறியப்பட்ட திமுகவின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி, இந்த தேர்தல் பிரசாரத்தின்போது திண்டுக்கல் நாகல்நகர் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலில் இருந்து புறப்பட்ட போது, தொண்டர் ஒருவர் ஐ.பெரியசாமியின் காலணிகளை கையில் எடுத்து வந்து கொடுத்தார். அதைக் காலில் அணிந்து கொண்டு ஐ.பெரியசாமி புறப்பட்டு சென்றார்.

மேடைக்கு மேடை சமூக நீதி மற்றும் சுய மரியாதை பற்றி பேசும் திமுகவின் மாநில துணைப் பொதுச் செயலாளரே, தொண்டனை செருப்பை தூக்க வைத்த சம்பவம் திமுகவின் உண்மை விசுவாசிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Exit mobile version