திமுக ஆட்சிக்கு வந்தால் வன்முறை தலைதூக்கும்: துணை முதலமைச்சர்

மத்தியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்யவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியில் நாடாளுமன்ற வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், மக்கள் நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்க கூடியது தான் மக்களவை தேர்தல் என்று குறிப்பிட்டார். திமுக ஆட்சிக்கு வந்தால் வன்முறை தலைதூக்கும் எனக்கூறிய அவர், யார் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என உறுதிபட தெரிவித்தார்.

பணங்குடி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர், தமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என உறுதியளித்தார்.

நாகர்கோவிலில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது, காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி உரிய தீர்ப்பை பெற்றுத் தந்தது அதிமுக அரசு தான் என தெரிவித்தார். 

Exit mobile version