"பிகில்" படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுப்படி

நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் பிகில் திரைப்படம் தன்னுடையது என்று கோரி வழக்குத் தொடுத்த உதவி இயக்குநர் செல்வா தற்போது அந்த வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளார்.

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய், நயன்தாரா, ஏ.ஆர் ரஹ்மான் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் “பிகில்”. பெண்கள் கால்பந்தாட்டைத்தை மையமாக வைத்து ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் விஜய் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடித்துள்ளார்.

இந்த நிலையில், இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குநர் செல்வா கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இயக்குநர் அட்லி, ஏ.ஜி.எஸ் படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் ஆகியோரை எதிர்மனுதாரராகச் சேர்த்துச் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க உள்ளதால், உரிமையியல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கைத் திரும்பப் பெறுவதாக செல்வா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version