சென்னை வந்த குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு சிறப்பான வரவேற்பு

5 நாட்கள் பயணமாக தமிழகம் வந்த குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடுவை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.

தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, 5 நாட்கள் பயணமாக, குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Exit mobile version