முதலீட்டாளர்கள் தொழில் செய்யும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: வெங்கையா நாயுடு

கடின உழைப்பாளர்களையும், திறமையான மனிதர்களையும் கொண்டுள்ளதால், முதலீட்டாளர்கள் தொழில் செய்யும் மாநிலமாக தமிழகம் திகழ்வதாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நிறைவுநாள் விழாவில் உரையாற்றிய அவர், 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். தமிழகம் தொழில் முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும் மாநிலம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version