லலிதா ஜூவல்லரி கொள்ளைக்கு பயன்படுத்திய சொகுசு வேன் பறிமுதல்

திருச்சி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி முருகன், கடத்துலுக்கு பயன்படுத்திய சொகுசு வேனை காவல்துறையினர் கைப்பற்றினர்.

திருச்சி லலிதா ஜூவல்லரி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான முருகன், பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில், கொள்ளையடிக்க முருகன் பயன்படுத்திய சொகுசு வேனை, தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றவாளியான வாடிப்பட்டி கணேசன் அளித்த தகவலின் பேரில், வேனை காவல்துறையினர் கைப்பற்றினர். கணேசனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version