News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மாகாணமாக சிதறி இருந்த இந்தியாவை ஒருங்கிணைத்தவர் வல்லபாய் படேல்

Web Team by Web Team
October 31, 2019
in TopNews, இந்தியா, செய்திகள், வீடியோ
Reading Time: 1 min read
0
மாகாணமாக சிதறி இருந்த இந்தியாவை ஒருங்கிணைத்தவர் வல்லபாய் படேல்
Share on FacebookShare on Twitter

பல மாகாணங்களாக சிதறி இருந்த இந்திய தேசத்தை ஒருங்கிணைத்து, இரும்பு மனிதர் என்று அழைக்கபட்ட சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த தினம் இன்று….

பிரிந்து கிடந்த பாரத தேசத்தை ஒன்றிணைத்தவர் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல். குஜராத்தில் 1875 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி விவசாய குடும்பத்தில் பிறந்தார். சிறு வயது முதல் படிப்பில் சிறந்த மாணவராக விளங்கிய படேல் வழக்கறிஞராக வேண்டும் என்ற தாக்கத்தில் இருந்த அவர் தனது 25 வயதில் டிஸ்ட்ரிக்ட் பிளிடர் படிப்பை முடித்தார். பின்னர் 1910 ஆம் ஆண்டு லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று நாடு திரும்பிய பிறகு அகமதாபாத்தில் வழக்கறிஞராக பணியினை தொடங்கினார்.

அகமதாபாத்தில் வழக்கறிஞர் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைக்காக போராடி அவர்களின் இதயத்தில் இடம் பிடித்தார் பட்டேல். 1917 ஆம் ஆண்டு முதன் முறையாக மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் பிரபலமாக மக்கள் மத்தியில் இருந்தபோது மகாத்மா காந்தியின் உரையினை கேட்ட அவர், வழக்கறிஞர் தொழிலை விடுத்து தன்னை சுதேசி இயக்கத்தில் இணைத்துகொண்டார். மக்களுக்காக போராட்டம் நடத்திய பட்டேலுக்கு போராட்டமும் சிறைவாசமும் வாடிக்கையாகிப்போனது.

அதனை தொடர்ந்து காந்தி நடத்திய பல போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். இரண்டாவது வட்டமேஜை மாநாட்டு தோல்விக்கு பிறகு மகாத்மா காந்தியும் படேலும் கைது செய்யபட்டு ஏர்வாடா மத்திய சிறையில் அடைக்கபட்டனர். அங்குதான் காந்தியும், பட்டேலும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்ட தருணம் ஆகும். அதன் பிறகு காந்தியின் கொள்கையினை பின்பற்றி நடந்தார். 1947 இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அந்த சமயத்தில் அவர் ஆற்றிய பணிகள் சாதாரணமானது அல்ல.

சுதந்திரம் அடைந்தும் நாடு முழுவதும் பல தன்னாட்சி மாகாண ஆட்சிமுறை பரவலாக இருந்தது. இதில் 565 ராஜ்ஜியங்கள் சிதறுண்டு கிடந்தது. இவற்றையெல்லாம் ஒருங்கிணைக்கும் பொறுப்பை பட்டேலிடம் ஒப்படைத்தார் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. பல போராட்டங்கள், சர்சைகளுக்கு மத்தியில் இந்திய நாட்டை ஒருங்கிணைத்து இரும்பு மனிதர் என்று அழைக்கபட்டார் பட்டேல். தன்னுடைய 75 ஆவது வயதில் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி காலமானார். அவரது சாதனைகளை போற்றும் விதமாக நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1999 ஆம் ஆண்டு வழங்கபட்டது.

இவரை இன்னும் கவுரவிக்கும் வகையில் கடந்த ஆண்டு குஜராத்தின் காந்தி நகரில் 597 அடியில் உலகிலேயே மிகப் பெரிய சிலை குஜராத்தில் நிறுவப்பட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திறக்கப்பட்டது.

Tags: இரும்பு மனிதர்சர்தார் வல்லபாய் படேல்
Previous Post

சட்டப்பிரிவு 370 இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்: ஐரோப்பிய எம்.பி.க்கள் குழு

Next Post

முரசொலி பத்திரிகையில், டெங்குவால் பாதிப்படைந்த சிறுவன் இறந்ததாக செய்தி வெளியீடு

Related Posts

இன்று 144-வது பிறந்தநாள்: படேல் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி
TopNews

இன்று 144-வது பிறந்தநாள்: படேல் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி

October 31, 2019
சர்தார் வல்லபாய் படேல் பெயரில் புதிய விருதை அறிவித்த மத்திய அரசு
TopNews

சர்தார் வல்லபாய் படேல் பெயரில் புதிய விருதை அறிவித்த மத்திய அரசு

September 26, 2019
சர்தார் படேலின் சேவைக்கு தலை வணங்குகிறேன்- மோடி
TopNews

சர்தார் படேலின் சேவைக்கு தலை வணங்குகிறேன்- மோடி

October 31, 2018
சர்தார் படேல் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை
TopNews

சர்தார் படேல் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை

October 31, 2018
Next Post
முரசொலி பத்திரிகையில், டெங்குவால் பாதிப்படைந்த சிறுவன் இறந்ததாக செய்தி வெளியீடு

முரசொலி பத்திரிகையில், டெங்குவால் பாதிப்படைந்த சிறுவன் இறந்ததாக செய்தி வெளியீடு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version