ஒரே வாரத்தில் வைகை அணையின் நீர்மட்டம் 10 அடியை தாண்டியது

தொடர் நீர்வரத்து காரணமாக வைகை அணையின் நீர்மட்டம், கடந்த ஒரு வாரத்தில் 10 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மழைப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வைகை அணைக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,700 கன அடியாக உயர்த்தப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து ஒரே வாரத்தில் 10 அடியை தாண்டியது.

71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் தற்போது 43.67 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி வைகை அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 498 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால், அணையிலிருந்து மதுரையின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Exit mobile version