உத்தரப்பிரதேசத்தில் வாயில் வெடி வெடித்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை

 

மூன்று வயது பெண் குழந்தையின் வாயில் வெடி வைத்த மர்ம நபரை காவல் துறையினர் தேடி வரும் நிலையில், காயமடைந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள மிலக் எனும் கிராமத்தை சேர்ந்த மூன்று வயது சிறுமி, வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் சிறுமியின் வாயில் வெடி வெடித்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த சிறுமி, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான நபரை தேடி வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version