டாஸ்மாக் கடையை உடைத்து 2 மதுபாட்டில்களை மட்டும் எடுத்துச் சென்ற திருடர்கள்!

காஞ்சிபுரத்தில், அரசு மதுபானக் கடையின் பூட்டை உடைத்து, இரண்டு மதுபாட்டில்களை மட்டும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வேடல் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு, வழக்கம்போல கடையை திறக்க வந்த பணியாளர்கள், இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கடையை சுற்றிப்பார்த்தபோது, பின்பக்கம் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளையிடப்பட்டு இருந்தது.

நள்ளிரவில் புகுந்த திருடர்கள், கல்லாவை உடைக்க முடியாததால், மேலே இருந்த 1,300 ரூபாய் பணம், 2 மதுபான பாட்டில்களை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆள் நடமாற்றம் அற்ற பகுதி என்பதாலும், கடையில் சிசிடிவி இல்லாததாலும் திருடர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

Exit mobile version