சுனாமி சீரமைப்பு பணிபோல் கஜா புயல் சீரமைப்பு பணியும் விரைவாக செயல்படுத்தப்படுகிறது – அமைச்சர் காமராஜ்

சுனாமி தாக்கியபோது மேற்கொண்ட நிவாரண பணியைபோல் கஜா புயல் சீரமைப்பு பணியும் விரைவாக செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் நிவாரண பணி குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், கே. சி.வீரமணி ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், சுனாமி தாக்கியபோது ஜெயலலிதா தலைமையிலான அரசு எந்த வேகத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு பேரழிவின் சுவடே இல்லாமல் மாற்றியதைபோல், தற்போதைய அரசும் விரைவாக செயல்படுவதாக கூறினார்.

Exit mobile version