மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை

மேற்குவங்க மாநிலத்தில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ், தமது கிருஷ்ணகஞ்ச் தொகுதியில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேடையில் அமர்ந்திருந்த போது, அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சத்யஜித் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் அவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் இக்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதனால் அம்மாநிலத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Exit mobile version