மேற்கு வங்கத்தில் வன்முறை நிகழ்ந்த தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்: பாஜக

மேற்கு வங்கத்தில் வன்முறை நிகழ்ந்த தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று, பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின்போது மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோர் மனு ஒன்றை அளித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக தொண்டர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் விரிவான மனுவை அளித்திருப்பதாக கூறினார்.

7 ஆம் கட்ட வாக்குப்பதிவின்போது மேற்கு வங்கத்தில் வன்முறை வெடித்ததாக கூறிய அவர், எனவே வன்முறை நிகழ்ந்த தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version